இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புயலின் மொழியில் பேசிய குயில் 领 è LHTQ}f எட்டயப்புரத்தின் வெளிச்சக்கீற்று பட்டயங்களுக்கு மயங்காத பாட்டுநிலவு சித்திரை மாத நிழல். மாசு இல்லாமுத்திரைப் பொன். அவன் கவிதையிடம் நதிகள் வந்து நடைபயின்றன. மரங்கள் அவன் பெயரைக்கேட்டு மலர்ச்சி கொண்டன. மலர்கள் அவன் வார்த்தைகளிடம் வசீகரம் பெற்றன. இடிகள் முழக்கம் பெற்றன. அங்கங்களோடும் ஆடைகளோடும் சாரமும் சல்லாபமும் செய்த கவிகளின் எழுத்தாணிகளை அவன் முறித்துப் போட்டான். அந்தப் புரங்களில் அரண்மனைகளில் ஜமீன்தார்களின் சயன அறைகளில் 200