பக்கம்:பாரதியம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதில் ஒரு பதில் நீ 象 தமிழன்பன் அர்த்தங்களின் அடர்த்தி தெறிக்க எமது வாசலில் வந்து மகரந்தம் கொட்டிய வசந்தமே! பனையோலைமேல் படுத்துக்கிடந்த தமிழ் எழுத்துக்களுக்குப் பள்ளி எழுச்சி பாடியவனே! பாரதி! உச்சிச் சூரியனை நகலாக்கிவிட்ட ஒளியின் அசல் நீ! நெருப்புக்குப் பிறப்புக் கொடுக்கும் வெப்பச் சிந்தனை விந்து சுமந்து எமது துறைமுகம் கனல வந்த கப்பல் நீ! 209

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/209&oldid=817184" இலிருந்து மீள்விக்கப்பட்டது