பக்கம்:பாரதியம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சம் சவுக்கால் அடித்து மேய்த்த மானுட மந்தைக்கு உனது புல்லாங்குழலின் பொத்தல்கள் தைரிய ஊற்றுகளாய்க் கண் திறந்தன. குங்குமத் திலகமும் கொப்பளித்து வெடிக்க-மங்கையர் உனது கவிதையில் நிமிர்ந்தனர். இமயம் தனது உயரங்களை அனுப்பி பேட்டிகானஅவர்களிடம் நேரம் கேட்டது. சிதாரின் நரம்புகளில் சிலிர்த்த-எம் சின்னப் பாப்பாக்களை ராஜ இடிகளோடு கம்பீரமாகக் கை குலுக்க வந்தவன் நீ! இருபதில், எது கவிதை என்ற கேள்விக்கு முதலில் கிடைத்த ஒரு பதில்நீயே! 211

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/211&oldid=817187" இலிருந்து மீள்விக்கப்பட்டது