பக்கம்:பாரதியம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானச் சேவல் 4.

தேனரசன் ஒர் ஊழிப்புயலை உள்ளுக்குள் கருத்தரித்த ஆவேச ஊர்வலமே! துடிப்புமிகுந்த நொடிப்பொழுதுகளின் ஜீவிதத் தொகுப்பே நீர்க்குமிழி வேதாந்த மாயத்தமிழைப் போர்க்குரிய படைக்கலமாய் வார்த்தெடுத்த பட்டறையே! வெறும் பொட்டல் கரிசல் புழுதியிலிருந்து தமிழுக்குக் கிட்டிய பட்டை வைரப் பாட்டுப் புதையலே! வாழ்க்கையில் வக்கும் வழியும் காணாமல் மக்கிக் கிடந்த மனங்களை உருக்கு உலக்கைகளாய் வடிவமைப்புச் செய்துவிட்ட வைராக்கியமே! 212

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/212&oldid=817188" இலிருந்து மீள்விக்கப்பட்டது