பக்கம்:பாரதியம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ கண் சிவந்து கண்ட கம்பீரக் கனவுகளை நனவாக்கி விட்டோமா? கரியாக்கி விட்டோமா? நிரந்தர மாயொரு ஜீவ நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் உன் வீர விழிகளில் எங்கள் கண்களிலோ எப்போதும் கப்பிக்கிடக்கும் கலக்கப் புகைமூட்டம் வேளா வேளை வயிற்றுப்பசிக்கு நீ மென்று தின்றதோ வீட்டு வறுமையை தாகந்தீரப் பருகிக்கொண்டதோ சஞ்சலத்தண்ணீரை ஆனால் ஆடிப்பாடித் தேடிக் களித்ததோ ஆனந்த சுதந்தரம் ஆனந்த சுதந்தரம்!! அந்தச் சுதந்தரம் வந்த பிறகு அன்னிய அதிகார ஜலதோஷம் நீங்கியது இப்பொழுதெங்களைத் தொற்றியிருப்பது சுயநல வேட்கை ரத்த தோஷம்! சகோதரத்துவம் தாலாட்ட சமத்துவம் கண்துயில வேண்டிய சுதந்திரத் தொட்டிலில் 214

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/214&oldid=817190" இலிருந்து மீள்விக்கப்பட்டது