பக்கம்:பாரதியம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி! விடுதலை பெற்று வெள்ளி விழாக் கண்ட பின்னும் உன் கனவுகள் இன்னும் அறுவடை ஆகவில்லை நீ விதை விதைத்தாய்... நாங்கள் 'நீர் பாய்ச்சுவோம்’ உரம் போடுவோம் என்று நம்பினாய்... நாங்களோ விதைகளையே எடுத்துத் தின்னும் சுயநலக்காரர்கள்! விதைத்தவனே, நீ வரவேண்டும் கைநிறையக் கதிர்மணிகள் தரவேண்டும், ஏசு மகான் மூன்றாம் நாள் எழுந்து வந்தார் என்பார். நூற்றாண்டு விழாக் காணும் வேளையிலே 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று நீ இப்போதே வரவேண்டும் கவிஞர்கள் இங்கே பஞ்சம் என்றுன்னை அழைக்கவில்லை. எங்கள் விருப்பமெல்லாம் பாரதி என்றொரு மானிடன்.மாவீரன் இங்கே வரவேண்டும், இப்போதே வரவேண்டும்! 224

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/224&oldid=817204" இலிருந்து மீள்விக்கப்பட்டது