பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மஹாசக்தி- நீயிருப்பதை எவன் கண்டான்? உன அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம்சரி, இப்போது உன்னை வையமாட்டேன், என்8 காப்பாற்று. உன்னைப் போற்றுகின்றேன். பிறருக்கு நான் தீங்கு நினையாதபடி நீ அருள் புரிந்த நல்லது. துஷ்டர்களைக்கூட நீ தண்டனை செய கொள். எனக்கு அதிலே ஸ்ந்தோஷமில்லை. எனக் பிறர் செய்யும் தீங்குகளை நீ தவிர்க்க வேண்டும். நா உன்னையே சரணடைந்திருக்கிறேன். சொல்லு! மனமே, சொல்லு, பராசக்தி வெல் பராசக்தி வெல்க.' இந்தக் குறிப்பு கவிஞர் பாரதியாரின் வறுகை பிணியை ஒரளவு நன்கு காட்டுகின்றது. உண்மையான கவிஞரின் உள்ளம் மிக மிக மென்ன யானது. அதாவது ஒரு துன்பத்தைப் பூதக்கண்ணுடிபோ நூறு மடங்கு ஆயிரம் மடங்கு பெருக்கிக்காட்டும் இது புடையது. ஆகவே இதிலிருந்து பாண்டிச்சேரியி வாழ்க்கை எவ்வளவு துன்பமானது என்று ஊகித் அறியலாம். வறுமைத் துன்பத்தை எவ்வாறு பொறுத்து கொண்டாரோ அறியோம். காந்தியடிகள் ஒருசமயத்தி சொன்னர்: "நான் நகைச்சுவை ஒன்றுமட்டும் இல்லா போனல், எப்பொழுதோ துரக்கிட்டுக் கொண்டிருப்பேன் என்று. ஒருவேளை பாரதியாரையும் நகைச்சுவை நையாண்டியும் கிண்டலும் இல்லாது போனல் அெ உயிர் தரித்திருக்கவே மாட்டார் என்று ஊகித்து அறி லாம். அவருடைய இயல்பான இந்த நகைச்சுவைதர் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டு என்றும் உணரலாம்,