பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழக்கமுண்டு. க ைத காலrேiபம், உபந்யாவு முதலியன நடந்தால், தவருமல் கேட்கப் போவார். பெரு பாலும் கதை கேட்டுவிட்டு அதிருப்தியுடனே திருமண வருவார். வீட்டுக்கு வந்து உப்ந்யாஸிகளின் கொள்கைகது ஒரு மாஸம் தொடர்ச்சியாக நண்பர்களுடனே தர்க்கிப் பார். 'ஹிந்துக்கள் முற்காலத்தில் நல்ல மேதாவிகளா! இருந்தனர். இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான் நிலைமைக்கு வரப்போகிருர்கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாக வெளிப்பட்டு பிரஸங்கங்களும், கதைகளும் காலrே:பங்களும் நடத்தும் ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணுறுபேர் சமையல் வேலைக்குப் போகவேண்டிய வர்கள். அதை விட்டு, உலகத்துக்கு ஞானேபதேசம் பண்ணக் கிளம்பி விட்டார்கள். இது பெரிய தொல்க்க உபத்திரவம், தொந்தரவு, கஷ்டம், ஸங்கடம், ஹிம்ளை தலைநோவு. இந்தத் தேதியில், ஹிந்து ஜாதி முழு மூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான் பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்தினி நினைக்கும்போது வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. படகோனியா தேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தன் பேர் மூடர்களாக இருப்பார்களென்று தோன்றவில்லை என்று நானுவிதமாக நம் தேசத்தாரின் அறிவு நிலைமையை தூஷணை செய்து கொண்டேயிருப்பார். மேற்படி பிரமராய வாத்தியாருக்குத் தமிழிலும் கொஞ்சம் ஞானமுண்டு. ஐரோப்பியரின் சாஸ்திரங்களில் பலவற்றைத் தமிழில் எழுதியிருக்கிருர். சில சமயங்களில் கவிதைகூட எழுதுவார். இவருடைய கவிதை மிகவும் உயர்ந்ததுமில்லை, தாழ்ந்ததுமில்லை; நடுத்தரமானது இவருக்கு சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. ஆனல் பாடத் தெரியாது. தொண்டை சரிப்படாது. தாளத்தில் மஹ