பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏭᎥ ஆனல் காலை வேளையில் மனிதக் கூட்டத்தில் கொஞ்சம் உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகமாகக் காணப் படுவதால் அப்போது உலகம் மிகவும் சந்தோஷகரமான காட்சியுடையதாகிறது. தோட்டத்துக்கு நடுவே ஒரு கிணறு. அத்தோட்டத் தில் சில அரளிப்பூச் செடிகள்; சில மல்லிகைப்பூச் செடிகள்: சில ரோஜாப்பூச் செடிகள். அக்கிணற்றிலிருந்து அதற் கடுத்த வீதியிலுள்ள பெண்களெல்லோரும் ஜலம் எடுத்துக் கொண்டு போவார்கள். இந்தக் கதை தொடங்குகிற அன்று காலையில் அங்கு காந்தாமணியையும் பாட்டியையும் தவிர ஒரு குருட்டுக் கிழவர் தாமே ஜலமிறைத்து ஸ்நானத்தைப் பண்ணிக் கொண்டிருந்தார். போலீஸ் உத்தியோகத்திலிருந்து தள்ளு படியாகி, அதிலிருந்து அந்தக் கிராமத்துக்கு வந்து, தமது வாழ்நாளின் மாலைப்பொழுதை ராமநாமத்தில் செலவிடும் பார்த்தசாரதி அய்யங்கார், அங்கு பக்கத்திலே நின்று கிழவியைக் குறிப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். மேற்படி கிணற்றருகே ஒரு குட்டிச்சுவர். அதற்குப் பின்னே ஒரு வேப்பஞ் சோலை. அங்கு பல மூலிகைகளிருக் கின்றன. அவற்றுள் ஒன்று மிகுந்த பசி உண்டாக்குமென்று என்னிடம் ஒரு சாமியார் சொன்னர். அதுகொண்டு நான் மேற்படி மூலிகையைப் பறித்து வரும் பொருட்டாக அந்தச் சோலைக்குப் போயிருந்தேன். வானத்தில் குருவிகள் பாடுகின்றன. காக்கைகள் கா, கா என்று உபதேசம் புரிகின்றன. வானவெளியிலே ஒளி நர்த்தனம் பண்ணு கிறது. எதிரே காந்தாமணியின் திவ்ய விக்ரஹம் தோன் றிற்று. "உங்கப்பா பெயரென்ன?’ என்று பாட்டி காந்தா மணியிடம் கேட்டாள்.