பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 குயிற் பாட்டு ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்; காதலர் நீ எய்து கிலாக் காரணந்தான் யா(து) என்றேன். வேதனையும் நானும் மிகுந்த குரலினிலே காணக் குயிலி கதைசொல்ல லாயிற்று :"மானக் குலேவும் வருத்தமும் நான் பார்க்காமல், 20 உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்திர்! பெண் மைக் கிரங்கிப் பிழை பொறுத்தல் கேட்கின்றேன்; அறிவும் வடிவுங் குறுகி, அவனியிலே சிறியதொரு புள் ளாய்ச் சிறியேன் பிறந்திடினும் தேவர் கருணை யிலே தெய்வச் சினத்தாலோ, 25 யாவர் மொழியும் எளிதுணரும் பேறுபெற்றேன்; மானுடவர் நெஞ்ச வழக்கெல்லாம் தேர்ந்திட்டேன்; கானப் பறவை கலகலெனும் ஒசையிலும் காற்று மர ங்களிடைக்காட்டும் இசைகளிலும் ஆற்று நீ ரோசை அருவி யொலியினிலும் 3 O நீலப் பெருங்கடலெந் நேரமுமே தா னிசைக்கும் ஒலத் திடையே உதிக்கும் இசையினிலும், மானுடப் பெண்கள் வள ருமொரு காதலிளுல் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும், ஏற்ற நீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும் 35 கோற்ருெடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் கண்னமிடிப் பார்தம் சுவைமிகுந்த பண்களிலும் பண் ஆன மடவார் பழகு.பல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் 40 வேயின் குழலோடு வினே முத லா மனிதர் வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி தாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்கொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்; தாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப் 45 பாவி மனந் தானிறுகப் பற்றிநிற்ப(து) என்னேயோ ? நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர் மஞ்சரேத என்றன் மன நிகழ்ச்சி காணிரோ ? காதலை வேண் டிக் கரைக்கின்றேன், இல்லையெனில்,