பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலும் குரங்கும் பாயும் விழி நீர் பதைக்கும் சிறியவுடல் 23 I {} விம்மிப் பரிந்துசொலும் வெந்துயர்ச்சொல் கொண்டது வாய். அம்மவோ மற்ருங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே ஏதேதோ கூறி இரங்கும் நிலேகண்டேன்; தீதே து? நன்றேது ? செய்கைத் தெளிவேது ? அந்தக் கணமே அதையும் குரங்கினையும் சிந்தக் கருதி உடை வாளிற்கை சேர்த்தேன் ; கொன்றுவிடு முன்னே, குயிலுரைக்கும் வார்த்தைகளே தின்று சற்றே கேட்பதற்(கு) என் நெஞ்சம் விரும்பிடவும், ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வா (று) அருகே ஓங்குமரத் தின் பால் ஒளித்து நின்று கேட்கையிலே, பேடைக் குயில் இதனைப் பேசியது :- வானசரே ! ஈடறியா மேன்மையழ(கு) ஏ ய்ந்தவரே! பெண் மைதான் எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே ! நின்னழகைத் தப்புமோ ? மையல் தடுக்கும் தரமாமோ? மண்ணிலுயிர்க் கெல்லாம் தலைவரென மானிடரே எண்ணி நின்ருர் தம்மை ; எனில் ஒருகால், ஊர்வகுத்தல் கோயில் அரசு, குடிவகுப்புப் போன்றசில வாயிலிலே அந்த மனிதர் உயர் வெனலாம்; மேனி அழகினிலும் விண் டுரைக்கும் வார்த்தையிலும் கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே வானரர்தம் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ? ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும் பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும் மீசையை பும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் ஆசை முகத்தினேப்போல் ஆக்க முயன்றிடினும் ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே கூடிக் குடித்துக் குதித்தாலும் கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்ரு லும் வே(று)ளத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே வானரர் போல் ஆவாரோ 7 வாலுக்குப் போவதெங்கே ! ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ 7 பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல், 1 5 20 25 3 Ꮼ 46