பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 குயிற் பாட்டு மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் 45 கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும் தெய்வமென நிருதவி செய்தபின்னர் மேனிவிடாய் எய்தி யிருக்கும் இடையினிலே பாவியேன் வந்து மது காதில் மதுரவிசை பாடுவேன்; வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன்; 5{} வாலில் அடிபட்டு மனமகிழ்வேன்; 'மா'வென்றே ஒலிடுதும் பேரொலியோடு) ஒன்றுபடக் கத்துவேன் மேனியிலே உண்ணிகளே மேவாது கொன்றிடுவேன் கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து நீர் மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில் 55 பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்; காளை எருதரே! காட்டிலுயர் விரரே! தாளேச் சரணடைந்தேன், தையலெனக் காத்தருள் வீர்; காதலுற்று வாடுகின்றேன்; காதலுற்ற செய்தியினே மாதர் உரைத்தல் வழக்கமில்லே என்றறிவேன்; 66 ஆலுைம் என்போல் ஆபூர்வமாங் காதல்கொண்டால் தானு உரைத்தலன் றிச் சாரும் வழியுளதோ ? ஒத்த குலத்தவர்.பால் உண்டாகும் வெட்கமெலாம் இத்தரையில் மேலோர் முன் ஏழையர்க்கு நாண முண்டோ o தேவர் முன்னே அன்புரைக்கச் சிந்தைவெட்கம் கொள்வ (துண்டோ? 65 காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ? கீழடியார்; ஆசைதான் வெட்கம் அறியுமோ?’ என்று பல நேசவுரை கூறி நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி பண்டுயோ லே தனது பாழடைந்த பொய்ப்பாட்டை எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே. ア0 காதல் காதல் காதல்; காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல். முதலியன (குயிலின் பாட்டு) பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்; கோட்டுப் பெருமரங்கள் கூடி நின்ற காவறியேன்!