பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 குயிற் பாட்டு கானத் தெவிட்டர்தோர் இன் பக் கனவினிலே சேர்ந்துவிட்டாய்; மன்னவன்றன் திண்டோளை நீயுவகை ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச் சிந்தைகொண்டாய்; வேந்தன் மகன், தேனில் விழும் (வண்டினைப் போல் விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல் 1 1 5 ஆவலுடன் நின்னே த்தழுவியே, ஆங்குனது கோவை யிதழ் பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே, சற்று முன்னே ஊரினின்று தான் வத் திறங்கியவன், மற்று நீ வீட்டைவீட்டு மாதருடன் காட்டினிலே கூத்தினுக்குச் சென்றதனே க் கேட்டுக் குது கலமாய் | 20. ஆத்திரந்தான் மிஞ்சி நின்னே ஆங்கெய்திக் காண வந்தான், நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்துவிட்டான்; :பட்டப் பகலிலே, பாவிமகள் செய்தியைப் பார்! கண்ணுலங் கூட இன்னும் கட்டி முடியவில்லே; மண்ணுக்கி விட்டாள்! என் மானம் தொலைத்துவிட்டாள் ! 125 நிச்சய தாம்பூலம் நிலையா நடந்திருக்கப் பிச்சைச் சிறுக்கிசெய்த பேதகத்தைப் பார்த்தாயோ!' என்று மனதில் எழுகின்ற தியுடனே நின்று கலங்கினன் நெட்டைக் குரங்கனங்கே: மாப்பிளைதான் ஊருக்கு வந்ததையும், பெண் குயிலி 136). தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று - பாடி விளையாடும் பண்புகேட் டேகுரங்கன் ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம் யாரோ உரைத்துவிட்டார்; ஈரிரண்டு பாய்ச்சலிலே நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே 1 35. மாடன் அங்கு வத்து நின்ருன் மற்(று) இதனைத் தேன் மலையின் வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லே ; நெட்டைக் குரங்கன் அங்கு நீண்ட மரம்போலே எட்டிநிற்குஞ் செய்தி இவள்பார்க்க தேரமில்ல; அன்னியனைப் பெண்குயிலி ஆர்த்திருக்கும் செய்தியொன்று 1 40. தன்னையே இவ்விருவர் தாங்கண்டார், வேறறியார்; மாடனதைத் தான்கண்டான், மற்றவனும் அங்ங்னமே;