பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 "சமீபத்தில் மாடர்ன் ரிவியூ என்ற கல்கத்தாப் பத்திரிகையிலே உயோநேநோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு விகிதம் எழுதியிருக்கிரு.ர். அதிலே அவர் சொல்வதென்னவென்ருல்:- மேற்குக் கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கை யில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே யில்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற்குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல சொற்களைச் சேர்த்து வெறுமே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக்கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகமிருக்கிறது. தம்முடைய மனதிலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர் கதைகளெழுதுவோரைக்காட்டிலும் சக்தி குறைந்திருக்கிரு.ர்கள். ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்றுகூடச் சேர்ப்பது கிடையாது. கூடைகூடையாகப் பாட்டெழுதி அச்சிடவேண்டும் என்று ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக்கொண்டிருப்பவன் புலவகை மாட்டான். கவிதையெழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையையே கவிதை யாகச் செய்தோன்-அவனே கவி. புலவனுக்குப்பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின் பேச்சு இவற்றிலே ஈடுபட்டுப்போய் இயற்கை யுடனே ஒன்ருக வாழ்பவனே கவி. கற்றுமுடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே ஒரு சீடன் வாஷோ மத்ஸ்-வோ என்னும் புலவரிடம் மூன்று ரியோ (அதாவது, ஏறக்குறைய முப்பது வராகன்) காணிக் கையாகக் கொடுத்தானம். இவர் ஒரு நாளுமில்லாதபடி புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது