பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ? மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே எண்ணிநின்ருர் தம்மை; எனிலொருகால், ஊர்வகுத்தல் கோயில் அரசு, குடிவகுப்புப் போன்றசில வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம். மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, வானரர் தஞ் சாதிக்கு மாந்தர்நிகராவாரோ? ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும், பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும், மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும் ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்ருலும், வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே வானரர்போ லாவரோ? வாலுக் துப் போவதெங்கே? ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ? பாகையிலே வாலி ருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல்; வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? சைவசுத்த போசனமும், சாதுரியப் பார்வைகளும்வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ? வானரர்தம் முள்ளே மணிபோல உ ை டைந்தேன். பிச்சைப பறவைப் பிற சபீலே ேன் டினும், நிச்சயமா முன்புரிநத நேமத தவங்களினல் தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்திகொண்டேன், தம்மிடத்தே ஆவலிற்ை பாடுகின்றேன். ஆரியரே கேட்டருள்வீர்.” இது கேட்டுக் கவிஞர் சினத்தீ மூள, உடைவாளை எடுத்துக் குயிலையும் குரங்கையும் ஒருங்கே கொல்ல முயல்கின்ருர்,