பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-உரைநடையில்-அரசியல் obpo rupgrušebšžiše si-et சீனிவாசன் 217

35-ஐம்பெரும்-குழுக்கள்:

அரசின் அங்கங்களையும், பிரிவுகளையும் பற்றி ஐம்பெரும் குழுக்கள், எண்பேராயம் என்று சிலப்பதிக்காரம் குறிப்பிடுகிறது. இதர பண்டைய தமிழ் இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.

“குழு என்னும் பழைய தமிழ்ச் சொல்லுக்குக் கூட்டம் என்று அர்த்தம். இப்போது மகாசபை என்று சொல்வதை பழைய தமிழர்குழு என்றனர். தமிழரசர் காலத்தில் ஐந்து குழுக்கள் உண்டு. 1. குடிகள் குழு, 2. குருக்கள் குழு, 3. ஜோதிடர் குழு, 4. வைத்தியர் குழு, 5. மந்திரிகள் குழு.

“ராஜா செய்யும் விதிகள் இந்த ஐந்து குழுக்களின் அனுமதி பெற்ற பிறகு தான் உறுதிப்படும். குடிகளின் குழுவிலே ஜனங்களின் பிரதிநிதிகள் இருந்தனர். குருக்கள் சபையிலே மதத் தலைவரும், ஜோதிடர் சபையிலே கணிதக்காரரும், இருந்து அரசியலானது சாஸ்திரக் கருத்தையும், ஜனாச்சாரங்களையும் தழுவி நடக்கும் படி ஆலோசனை சொல்லினர். வைத்தியர் குழு நாட்டிலே நோய்கள் பரவாதபடி அரசன் செய்ய வேண்டிய சுத்தி முறைகளை கவனிப்பது. மந்திரிகளின் குழு அரசியலின் மூல தர்மங்களிலே தவறு நேரிடாமல் அரசனை நியாய வழியில் நடத்துவது. இந்த விஷயமெல்லாம் நமது நாட்டுப் பழைய சாசனங்களை ஆராய்ச்சி செய்யும் புராதனப் பரிசோதனைப் பண்டிதர்கள் கண்டு பிடித்துச் சொல்லியிருக் -கிறார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழைய நூல்களிலும் காணலாம். இது நிற்க,

ஜனங்களுடைய சம்மதப் படி ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்துடன் ஏற்படும் சபைகள், இங்கிலாந்து முதலிய தேசங்களில் நாளுக்கு நாள் நாகரிகமும் சீர்திருத்தமும் பெற்று மேன்மேலும் அதிக வலிமையுடன் ஏறி வந்திருப்பதாகச் சரித்திரங்களிலே தெரிகிறது.