பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 9 I சிந்துநதியில் நல்ல நிலாக் காலத்தில் ஒரு தோணி ஒடுகிறது. அத் தோணியில் சேர நாட்டுப் பெண்ணோடு தமிழ்நாட்டு இளைஞன் அமர்ந்துள்ளான். இருவரும் சுந்தரத் தெலுங்கிற் பாட்டிசைக்கின்றார்கள். நாட்டின் வடக்கே சிந்துநதி; கீழ்க்கோடியில் கேரளம்; அதனை யடுத்துத் தமிழ்நாடு; அதனையும் அடுத்து ஆந்திராஇந்த நான்கு நாடுகளையும் ஒருங்கிணைத்து ஒர் உற்சாகப் பாடல். இப் பாட்டோடு நிற்கவில்லை பாரதி. *கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டத்தினைக் காவிரி ைெற்றிலைக்குப் பண்டமாற்றுச் செய்து கொள் வோம்’ என்கிறார். சிங்க மராட்டியரின் சீர்சால் கவிதை களுக்குச் சேரநாட்டுத் தந்தங்களைப் பரிசளிப்போம் என்றும் காசி நகர்ப்புலவர் பேசும் உரை தனைக் காஞ்சிமா நகரிற் கேட்பதற்கு ஒரு கருவி செய்வோம் என்றும் உரைக் கிறார். இராசபுதனத்து வீரர் தமக்குக் கன்னடத்துத் தங்கத்தை வழங்குவோம் என்று கூறி மகிழ்கிறார் பாரதி. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைத்துச் சேதுவை மேடாக்கி வீதி அமைத்து இரு நாடுகளுக்கிடையே நல்லுறவுப் பாலத்தை-நட்புறவுப் பாலத்தை அமைப் போம் என்கிறார். வங்க நாட்டில் ஆற்று நீர்ப் பெருக்கின் மிகுதியைத் திருப்பிவிட்டு நீர் வளம் குறைந்த மையத்து நாடுகளிற் பயிர் செய்குவோம் என்கிறார். முப்பது கோடி முகமுடை யாளுயிர் மொய்ம்புற வொன்றுடையாள்-இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற் சிந்தனை யொன்றுடையாள் - . என்றும்,