பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&.rusy. 93 எப்பதம் வாய்த்திடு மேனும் . கம்மில் யாவர்க்கு மந்தநிலை பொதுவாகும் முப்பது கோடியும் வாழ்வோம் விழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் என்று குறிப்பிடுகின்றார். தாயின் மணிக்கொடியின் கீழ்ச் செந்தமிழ் நாட்டுப் பொருநரும், சேரநாட்டு வீரர்களும், சிந்தை துணிந்த தெலுங்கர்களும், தாயின் சேவடிக்கே பணிசெய்திடு துளுவர்களும், கன்னடியர்களும், ஒட்டியராம் ஒரிஸாக் காரர்களும், போரிற் காலனும் அஞ்சக் கலக்கும்’ மராட்டியர்களும், பொன்னகர்த் தேவர்களொப்ப நிற்கும் பொற்புடையாராம் இந்துஸ்தானத்து மல்லர் களும், ராஜபுதனத்து வீரர்களும், பஞ்சநதத்துப் பிறந் தோரும், துஞ்சு பொழுதிலும் தாயின் பதத்தொண்டு நினைத்திடும் வங்கத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து நின்று, தாயின் மணிக்கொடியைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திடும் அற்புதக் காட்சியின் மாட்சியினையும் பாடுகிறார் பாரதியார். இவ்வாறு பாரதியார், பாரத நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு-ஒருமைப்பாட்டுசி சிந்தையுடன், சாரதத் தாயின் திருப்புதல்வர்கள் என்ற வீறார்ந்த பெருமையுடன் வாழவேண்டும் என்பதனைச் சித்திரித்துக் காட்டி நிற்:தோடு சேதமில்லாத இந்துஸ் தானத்தில் பேதமில்லாமல் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒருங்கிணைந்து வாழும் மாட்சியினை-பாரத நாட்டின் ஒருமைப்பாட்டினைப் பண்போடும் பயனோடும் குறிப்பிடுகின்றார்.