பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 பகவான் அந்தக் கல்லைவிட்டுப் போய்விடுவார். அது மறுபடி சாதாரண ரஸ்தா உருளை ஸ்தானத்திற்கு வந்து சேர்ந்துவிடும். கோவிலுக்குப் போனலும் சரி; போகாவிட்டாலும் சரி; தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடா விட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினல், தெய்வம் அருள் புரியும். துளிகூட, ஒரு அணுக்கூட. மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாதென்று ஒருவன் பரி பூரண சித்தி அடைவாளுகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, புழு, எறும்பு, ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக்கூடாது. வஞ்சனையில்லாமல் 'ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி” என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்லவேண்டும். அங்ங்ணம் முற்றிலும் பராதீனய்ை எவன் ஈசுவரன் மீது ஸ்கல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிருனே, அவனுக்கு தெய்வத்தன்மை உண்டாகும். இதில் ஸ்ந்தேஹமே கிடையாது. பலஹlன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிருனே அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயம் நீங்கினற் கலியில்லை. உலகம் முழுதும் கலியில்லை. “உலகம் முழுதும் அநியாயத்தை விட்டு சமீப காலத்தில் நீங்குமென்று நினைக்க ஏதுவில்லையாதலால் கிருதயுகம் வரப் போவதில்லை. நாம் மாத்திரம் ஏன் நியாயம் செய்யவேண்டும்?' என்று விபரீதமாக யோசித்து, எவனும் தான் நடக்கும் அநியாய வழியிலே தொடர்ந்து செல்லக்கூடாது. எவன் அநியாயத்தை விடுகிருனே, அவனுக்குக் கிருதயுகம் அந்த கடினமே கைமேலே கிடைக்கும். இதில் ஸ்ந்தேஹமில்லை. ஒருவன் கலியை உடைத்து நொறுக்கினால், அவனைப் பார்த்துப் பத்துப்பேர் உடனே நொறுக்கி விடுவார்கள்,