பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

787 திருஷ்டாந்தம் காட்டப் புகுமிடத்தே, நமது நாட்டில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் தேறி வரும் மனிதரைப்போல் இத்தனை சிறந்த திருஷ்டாந்தம் வேறெங்கும் கிடைப்பது மிகவும் துர்லபமென்று தோன்றுகிறது என்று எள்ளி நகையாடுகின்ருர்.) நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதல்ை நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை. இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள் : நrத்திரம், லக்னம் முதலியன பார்த்தல். கூடிவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்ருல், அதற்குக்கூட நம்மவர் மாஸ்ப்பொருத்தம், பகடிப்பொருத்தம், திதிப் பொருத்தம், நாட் பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. கூடிவரத்துக்குக்கூட இப்படியென் ருல், இனிக் கலியாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற் படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத் துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந் தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் நேர அழிவுகளும், அவற்ருல் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடை யாது. சகுனம் பார்ப்பதல்ை காரிய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாட்பொருத்தம், லக்னப் பொருத்தம்