பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I3 கோத்தருள் புரிந்த குறிப்பரும் பொருளே! அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய் எங்குல தேவா போற்றி! சங்கரன் மகனே! தாளிணை போற்றி! வெண்பா போற்றி! கலி யாணி புதல்வனே! பாட்டினிலே ஆற்ற லருளி அடியேனைத்-தேற்றமுடன் வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள் வீணையொலி என் நாவில் விண்டு. கலித்துறை விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்: பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னுவிற் பழுத்த சுவைத் தெண்டமிழ்ப் பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே. விருத்தம் செய்யாள் இனியாள் பூரீதேவி, செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள். கையா ளெனநின் றடியேன்செய் தொழில்கள் யாவும் கைகலந்து செய்வாள்; புகழ்சேர் வாணியுமென் னுள்ளே நின்று தீங்கவிதை பெய்வாள்! சக்தி துணைபுரிவாள்! பிள்ளாய்: நின்னைப் பேசிடிலே.