பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 3. சுருதிப் பொருளே, வருக துணிவே, கனலே, வருக! கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா) 4. அமரா வதிவாழ் வுறவே அருள்வாய்! சரணம், சரணம்! குமரா பிணியா வையுமே சிதறக் குமுறும் சுடர்வே லவனே, சரணம்! (முருகா) 5. அறிவா கியகோ யிலிலே அருளா கியதாய் மடிமேல் பொறுவே லுடனே வளர்வாய்! அடியார் புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்! (முருகா) 6. குருவே! பரமன் மகனே! குகையில் வளருங் கனலே! தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமரா திபனே! சரணம் சரணம்! (முருகா) 35. முத்து மாரி (குறிப்பு : இது ஒர் புகழ்பெற்ற பாடல், மணி வெளுக்கச் சாணையுண்டு - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி! மனம் வெளுக்க வழியில்லை, - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! என்ற மாணிக்க வரிகளை உடையது இப்பாடல். ஒரு பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்கி, இப்பாடலை உருவாக்கிக் கொடுத்திருக்கிருர் பாரதியார். எங்கள் முத்து