பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I26

உடம்பை வலிமை செய்வதற்கு மன வலிமை வேண்டும்.

கஸ்ரத் முதலிய பழக்கங்களில் உடம்பு பலமேறுவத ற்கு மனவுறுதியும் ஆசையுமே முக்கிய காரணங்களாக வேல் செய்கின்றன.

ராமமூர்த்தி முதலிய நமது நாட்டு பலவான்களும் ஸாண்டோ முதலிய அன்னிய நாட்டு பலவான்களும் இவ் விஷயத்தை மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிரு.ர்கள் கையிலே தண்டு முதலியவற்றை எடுத்துச் சுழற்றுடி போது, வீமசேனனை நினைத்துக் கொள்ள வேண்டுமென்று எங்களுரிலே ஒரு பஹல்வான் சொல்லுவார். பிராணுயர், மத்தை மாத்திரமேயன்றி தியானம் முதலிய யோகமுறை களையும் ராமமூர்த்தி பெருந்துணை யென்று சொல்லுகிறார்

ஸ்ாண்டோ தமது டம்பெல்ஸ் என்று சொல்லப்படும் இரும்புக்குண்டுகளே வைத்துப் பழகுவோர் வெறுமே கைகளில் குண்டுகளைத் தூக்கி அசைத்தால் பிரயோஜன மில்லை என்பதை மிகவும் தெளிவாக எழுதியிருக்கிரு.ர்.

குண்டைப் பிடித்து உறுதியுடன் முன்னே நீட்டிய கையை மடக்கும்போது, உமது மனோபலம் முழுதையும் கைத்தசைகளிலே செலுத்தி மெதுவாக மடக்க வேண்டும் கவனத்தை ம்ற்றாெரு பொருளிலே செலுத்தினல் தசை களுக்கு சரியான வலிமை யேருதென்று சொல்லுகிரு.ர்.

உடம்பு நாடிகளுக்கு வசப்பட்டது. நாடிகள் மனதில் வசமாகும். ஆகையால், உடம்பிலுள்ள நோய்கள்ை: தீர்த்து வலிமை யேற்றுவதற்கு, மனவுறுதி, நம்பிக்கை உத்ஸாகம் முதலிய குணங்கள் பிரதானமாகக் கொள்ள:

தகும்,