பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互05 மிருக்க்லாம். இங்கே அவர் சாதாரணமாக இருந்தார். பின்னிட்டு அவர் பல தேசங்களிலே சஞ்சாரம் செய்து, பிரான்ஸ் தேசத்திலே போய் நல்ல கீர்த்தியடைந்திருக் கிரு.ர். அங்கே பல பெரிய வித்வான்களும் பிரபுக்களும் அவருடைய தொழிலை அற்புதத்திலும் அற்புதம் என்று கொண்டாடுகிருர்கள். சங்கீத ஞானமுடைய தமிழ்ப் பிள்ளைகள், முதலாவது கொஞ்சம் இங்கிலீஷ் கற்றுக் கொண்டு பிறகு ஐரோப்பிய சங்கீதத்தின் மூலாதாரங் களைத் தெரிந்து கொள்ளவேண்டும். இது மிகவும் சுலப மான காரியம். தமிழருடைய அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம். இந்தத் தேர்ச்சி கொஞ்சமிருந்தால், பிறகு நமது சங்கீதத்தை ஐரோப்பியர் அனுபவிக்கும்படி செய்தல் எளிதாகும். அப்பால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போய் நமது சங்கீதத்தின் உயர்வை அவர்களுக்குக் காட்டினல் மிகுந்த கீர்த்தியும் செல்வமும் பெறலாம். எவ்விதமான யோசனை. எவ்விதமான தொழில், எவ் விதமான ஆசை, எதையும் கொண்டு பிறதேசங்களுக்குப் போகவேண்டும். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை செய்யப் போதுமான திரவிய மில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம். வெளியுலகம் நம்மை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது வரவுக்குக் காத் திருக்கிறது. நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டி ருக்கிறது. வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடு பெற்ருலொழிய, இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழி யில்லை. ஆதலால், தமிழ்ப் பிள்ளைகளே, வெளி நாடு களுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினலும், மன அறுதியிலுைம், பல விதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும், செல்வத்துடனும், வீர்யத்துடனும், ஒளி யுடனும் திரும்பிவாருங்கள். உங்களுக்கு மஹாசக்தி துணிை சேய்க. ۶ سحسنه trr