பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 யையே மிகவும் விசேஷமாக எடுத்துச் சொல்லக்கூடும். "தமிழ் நாட்டின் மற்றச் செல்வங்களையெல்லாம் இழந்து விடப் பிரியமா? ஒளவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா? என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், மற்றச் செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீண்டும் சமைத்துக் கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்படமாட்டோம். அது மீண்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்" என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப் பட்டிருக்கிருேம். தமிழ் நாட்டு நாகரிகத்துக்கு இத்தனை பெரும் செல்வமாகவும், இத்தனை ஒளி சான்ற வாடாவிளக் காகவும் தனிப்பேரடையாளமாகவும் தமிழ் மாதொருத் தியின் நூல்கள் விளங்குவது நமது நாட்டு ஸ்திரீகளுக்குப் பெரு மகிழ்ச்சி தரத்தக்கதொரு செய்தியன்ருே ? இஃது தமிழ் ஸ்திரீகளுக்கு வெறுமே புகழ் விளைவிப்பது மாத்திர மன்று. அவர்களுக்கு கிரமமான காவலுமாகும். ஒளவை யார் பிறந்த நாட்டு மாதரை, ஒளவையார் இனத்து மாதரை, ஆண் மக்களைக் காட்டிலும் அறிவிலே குறைந்த கூட்டத்தாரென்று வாய் கூசாமல் எவனும் சொல்லத் துணிய மாட்டான். மற்ற் தேசங்களில், திருஷ்டாந்தமாக இங்கிலாந்து தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கே ஆண் மக்களுக்கு சமானமான உரிமைகளை பெண்களுக்குக் கொடுப்பது தகாதென்று வாதம் பண்ணுகிற ககதியார், மாதர்கள் இயற்கையிலேயே ஆண் மக்களைக் காட்டிலும் அறிவில் குறைந்தவர்களென்றும், ஆதலால் வீட்டுக் காரியங்களுக்கே அவர்கள் தகுதியுடையோராவாரல்லாது அறிவுண்மையால் நடத்த வேண்டிய நாட்டுப் பொதுக் காரியங்களை நிர்வகிக்க அவர்களுக்கு திறமை கிடையா தென்று தர்க்கிக்கு மிடத்தே, அதற்கு ஒரு லாகூஜியமாக