பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 "ஆண் மக்களில் ஷேக்ஸ்பியர் என்னும் கவியரசர் எழுதியிருப்பது போன்ற கவிதை எழுதும் திறமை கொண்ட ஸ்திரீ ஒருத்தி நமது நமது நாட்டில் எப்போதே னும் தோன்றியிருப்பதுண்டா? ஏன் தோன்றவில்லை? இதல்ை இயற்கையிலே ஸ்திரீகள் ஆண் மக்களைக் காட்டி அலும் புத்தியில் குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்கு கின்றதன்ருே?" என்கிருர்கள். தமிழ்நாட்டிலோவெனில், இப்படிப்பட்ட வாதம் செல்லாது. அதற்கு நேர் எதிரிடையாக இந்நாட்டில் ஸ்திரீகள்:-"ஒளவையாரைப் போல் கவிதையும் சாத்திர மும் செய்யக்கூடிய ஒர் ஆண் மகன் இங்கு பிறந்திருக் கிருன? ஏன் பிறக்கவில்லை ? இதனின்றும் ஆண்மக்கள் இயற்கையிலேயே பெண்களைக் காட்டிலும் அறிவுத்திறமை யில் குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்குகிற தன்ருே?" என்று வாதிக்கக்கூடிய நிலைமையிலிருக்கிருர்கள். மகிமை பொருந்திய ஆத்ம ஞானியாகிய ஒளவையார் இயற்றியிருக்கும் 'ஒளவை குறள்' என்ற ஞானநூல் தமிழ் நாட்டு யோகிகளாலும் சித்தர்களாலும் உபநிஷத்துக் களுக்குச் சமானமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. யோக சாஸ்திரத்துக்கும் மோr. சாஸ்த்திரத்துக்கும் இந் நூல் முக்கிய பாடங்களில் ஒன்முகக் கருதத்தக்கது.மேலும் யோகாநுபூதி ஸம்பந்தமாகப் பிறர் எழுதுமிடத்தே மிகவும் கடினமும் அஸாதாரணமுமாகிய சொற்களையும் வாக்கியங்களையும் வழங்குதல் இன்றியமையாததென்ற கருத்துடன் வேலை செய்திருக்கிரு.ர்கள். ஒளவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட் டிருக்கிறது. "சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்' என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில்