பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கின்தன. பல சாகித்யங்கள் பாடுவார் அற்று மறைந்து போய்விட்டன. டாக்டர் சுவாமிநாத அயயர் அவர்கள் தம்முடைய வாழ்விலேயே இளமைப் பருவத்தில் கேட்ட அற்புதமான தமிழ்ச் சாகித்யங்களை முதுமைப் பருவத்தில் கேட்க முடியாமற்போய்விட்டது என்றும், அதற்குக் காரணம் தமிழ்நாட்டுப் பாகவதர்கள் தமிழிசைப் பாடல்களைப் புறக் கணித்துவிட்டு வேற்று மொழிப் பாடல்களைப் பாடினதுதான் என்றும் சொல்லியிருக்கிரு.ர்கள். தமிழ்நாட்டில் இப்போதுள்ள நிலை இங்லாண்டிலும் பத்தொன்பதாவது நூற்ருண்டில் ஏற்பட்டது. ஐரோப்பிய சாகித்யத்தில் மகாமேதைகளான பீத்தோவன் (Beethoven), வாக்னர் (Wagner) முதலியோர் உயர்ந்த சாகித்யங்களை ஜெர்மன் மொழியிலேயே இயற்றிவிட்டார்கள். இந்த ஜெர்மன் சாகித்யங்களை இங்கீஷ்காரர்கள் இங்லாண்டிலே இறக்குமதி செய்து கச்சேரிகளில் பாடத் தொடங்கினர்கள், ஜெர்மன் தெரியாத இங்கிலீஷ் பாகவதர்கள் இந்த ஜெர்மன் சாகித்யங்களைப் பாடினர்கள். கேட்க வந்த இங்கிலீஷ் அசடு கள், ஜெர்மன் மொழி தெரியாவிட்டாலும், நமக்குச் சங்கீதம் தெரியாது என்று யாரேனும் சொல்லிவிடுவார்களோ என்று பயந்து ஜெர்மன் சாகித்யங்களுக்குப் பொருள் தெரிந்தது போல் தலையாட்டினர்கள், பலே, பேஷ் என்று பாராட்டி ஞர்கள். கார்லேல் (Cartyle) என்ற ஆங்கிலப் பேரரறிஞர் இந்தக் கண்ராவியையெல்லாம் தாங்க முடியாமல் சீற்றம் கொண்டு ஜெர்மன் சாகித்யத்தை எதிர்த்தார். சங்கீதத்துக் கும் உணர்ச்சிக்கும் இடையிலே இருக்கும் உறவு, மனைவிக்கும் கணவனுக்கும் இடையே இருக்கும் உறவைப் போன்றது என்றும், ஜெர்மன் சாகித்யங்களை அர்த்தம் தெரியாமல் பாடுவதாலும் கேட்பதாலும் சங்கீதத்துக்கும் உணர்ச்சிக்கும் இடையிலே இருந்த விவாக உறவு ரத்தாகிவிடும் என்றும் அவர் சொன்னர். Joggsr(?, "Music has become mad, divorced from sense and the reality of things” (###33 35aramość5. பித்து பிடித்துவிட்டது, பொருள் உண்மை ஆகியவற்றுக்கும்