பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணம்மா என்று அந்த தெய்வக் குழந்தையை பாரதியார் அன்போடு அழைப்பார். நீங்கள் கண்ணம்மா - என் குழந்தை என்று பாரதியார் எழுதிய பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? இசை தெரிந்தால் அந்தப் பாட்டை அழகாகப் பாடலாம்.

பிள்ளைக் கனி அமுதே-கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே-என் முன்னே
ஆடிவரும் தேனே!

என்று இப்படிக் குழந்தையை அளவில்லாத அன்போடு பாரதியார் அழைக்கிறார்.

15