பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த உலகத்திலேயே இந்தியாதான் நல்ல நாடு என்கிறார் அவர்.

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு.

என்று போற்றுகிறார்.

இந்த பாரதியார்தான் தமிழ் மக்களைப் பார்த்துக் கும்பகர்ணனைப் போலத் தூங்குகிறீர்களே, எழுந்திருங்கள் என்று தட்டி எழுப்பினார்.

அவர் பாடிய பாடல்களைக் கேட்டுத் தமிழ் மக்கள் விழித்துக் கொண்டார்கள். நமக்கு விடுதலை வேண்டும்


அதற்காக நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம் என்று உற்சாகமாக எழுந்தார்கள். இந்தியாவின் மற்றப் பகுதிகளில் உள்ள மக்களும் இவ்வாறு விழிப்படைந்து எழுந்தார்கள்.

3