98 е அ. ச. ஞானசம்பந்தன்
என்பதும் அவருடைய வாக்குத்தான். சஞ்சீவ: பர்வதத்தின் சாரல்’ என்ற கவிதையில்,
இராமா யணம்என்ற கலிவு தரும்கதை பூமியில் இருப்பதை இப்பொழுதே அறிகின்றேன் கம்பத் தகாதவெலாம் நம்ப வைக்கும்
என்றெல்லாம் பாடியவர், கம்ப ராமாயணப் பாடல்: களை ஆய்ந்து வெளியிட்ட ரசிகமணி டி. கே. சி. அவர்கள் பல பாடல்களை இடைச்செருகல்கள் என்று கூறிப் புதிய பதிப்புப் போட்டதற்காகச் சீறுகிறார்.
கம்பனார் பதினோரா
பிரம்பாட்டில் முக்காலும்
கழித்துப் போட்டு கம்பினால் நம்புங்கள்
இவைதாம் கம்பன் செய்யுள் . என அச் சிட்டு வெம்புமா றளிக்கையிலும்
மேவாத செயல் இதனைச்
செய்ய இந்தக் கொம்பன் யார் எனக்கேட்க
ஆளில்லை யாபுலவர்
கூட்டக் தன்னில்
உண்மையில் கம்ப ராமாயணத்தை வெறுப்பவர் அந்நூலின் அளவை ஒருவர் குறைத்தால் அது ஒழிந்தது' என்று மகிழ வேண்டியதற்குப் பதிலாக ஏன் சீறவேண்டும்? மேலாகப் பார்க்கும்பொழுது