பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 அ. ச. ஞானசம்பந்தன்

ஐயமில்லை. காலத்தை வெல்லக்கூடிய படைப்பை அவன் வழங்கவேண்டுமானால் நின்று நிதானித்து, கருத்துகளை ஊறப்போட்டு, அவை நன்கு சமைந்தவுடன் வடிவு கொடுக்க முற்படல் வேண்டும். எத்துணைப் புதுமையைப் புகுத்த விரும்பினாலும் அப்புதுமை பழமையுடன் தொடர்பு கொண்டதாய் ஆழ்ந்த கால்கோளுடைய தாய் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.