பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஆ அ. ச. ஞான்சம்பந்தன்

அங்ங்ணம் தொடங்கும்பொழுது இதுவரை அடங்கியிருந்த அறிவாற்றலின் துணையும் தேவைப் படுகிறது. இந்த அறிவாற்றலின் துணை கொண்டு அந்த உணர்ச்சியை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தித் தேவையான அளவு வெளியிடுகிறான். ஒருசில கவிஞர்கள் குடத்தில் உள்ள நீரைக் குழாய் மூலம் வெளிப்படுத்துவது போலத் தம் உணர்ச்சியை ஒரளவு கட்டுப்படுத்தி வெளியிடுகின்றனர். இன்னும் சிலர் குடத்து நீரை அப்படியே கவிழ்ப்பதுபோலக் காட்ட முற்படுகின்றனர். இரண்டுமே நீரை வெளிப் படுத்துகின்ற இயல்பைப் பெற்றிருப்பினும், குழாய் மூலம் வெளியிடுவதுபோல் அப்படியே கவிழ்ப்பது விரும்பிய பயனை அளிப்பதில்லை.

இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு பாரதி, பாரதிதாசன் என்ற இருவருடைய கவிதைகளையும் ஆர அமர நினைந்து பார்ப்போமேயானால், இருவருடைய உணர்ச்சிக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அறிய முடியும். இருவருடைய ஆற்றலும் பேராற்றல்கள் என்பதிலும் ஐயமில்லை. பலவிடங்களில் வாழும் மக்களிடம் பழகிய காரணத் தால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் குழாய் மூலம் நீர் சொரிவதுபோலப் பர்ரதியின் கவிதைகள் வெளிப்பட்டன. தமிழர்களை அல்லாமல் பிற மக்க்ளோடு பழகும் வாய்ப்பைப் பெறாத காரணத் தாலும், பிற இடங்களுக்கு அதிகம் சென்று தங்கி உறவு கொள்ளாத காரணத்தாலும் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் குடத்தைக் கவிழ்த்து நீரைச் சொரிவது போல உணர்ச்சியை அப்படியே கொட்டி விடுகின்றன.