பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 செலுத்த வருமுன்பாகவே அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கு நம்மால் இயன்ற அளவு பாடுபட வேண்டும்". பள்ளிக்கூடம் என்ற வார்த்தை எடுத்த திலிருந்து ஆஸ்திரேலியா தேசத்துப் பெண் பள்ளிக்கூடம் ஒன்றைப் பற்றிய கதை-ஞாபகத்திற்கு வருகிறது. அதில் வாசித்துக் கொண்டிருந்த ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணை இன்ஸ்பெக்டர் வந்து பரீrை நடத்தியபோது பின்வரும் கேள்வி கேட்டாராம்: இந்தியா தேசத்து ஜனங்களின் சாதாரண போஜனம் எது? அந்தப் பெண் சொல்லிய மறுமொழி:- "பஞ்சம்." வேடிக்கையான கதை. கல்வி சம்பந்தமாக இன்னுமொரு மேற்கோள்: இன்று கிச்சடியே "மேற்கோள் கிச்சடி"தானே? மிஸ்டர் ஆர்ச்செர் என்ற ஒரு ஆங்கிலேயர் சில தினங்களின் முன்பு லண்டன் பத்திரிகை யொன்றில் கல்வியைப் பற்றி எழுதிக் கொண்டு வரும்போது, "இங்கிலாந்திலே இப்போது கல்விக்கு மூலாதாரமாக வசன காவியங்களையும், செய்யுட் காவியங்களையும், வைத்திருப்பது சரியில்லை. ஸயன்ஸ் (இயற்கைநூல்) படிப்புத்தான் மூலாதாரமாக நிற்க வேண்டும்' என்கிரு.ர். இவருடைய கொள்கை பலவித ஆrே:பங்களுக் கிடமானது. ஆனால், தனிப் பள்ளிக்கூடங்கள் எந்த முறைமையை அனுசரித்தபோதிலும், ராஜாங்கப் பள்ளிக்கூடத்தார் இவருடைய கொள்கையைத் தழுவியே படிப்பு நடத்தவேண்டுமென்று நான் நினைக்கிறேன். கற்பனையும் அலங்காரமும் எனக்குக்கூட மிகவும் பிரியந் தான். ஆனல்:"நெல் எப்படி விளைகிறது' என்பதைக்