பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置爵数 'விடியும் ஒரு ஜாமத்திற்குள்ளே' என்று குரல் சொல்லிற்று. இது கேட்ட மாத்திரத்திலே திடசித்தன் அயர்ந்து போனன். கண்கள் முன்னிலும் அதிகமாகச் சுழன்றன. நெஞ்சு முன்னிலும் விரைவாக அடித்தது. கால்கள் பதற லாயின. அப்போது அவனுடைய தாய் சொல்லிக்கொண்டிருந்த மந்திரமொன்று நினைப்பு வந்த து. உடனே உச்சரித்தான். தாய் இறந்துபோகும் சமயத்தில் அவனே அழைத்து அந்த மந்திரத்தை அவன் காதிலே உபதேசம் செய்துவிட்டு, "மகனே, உனக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்த சமயத் திலும் நீ இம் மந்திரத்தை உச்சரித்தால் விலகிப் போய் விடும்' என்று சொல்லியிருந்தாள். இப்போது அதனை உச்சரித்தான். 'கரோமி” (செய்கிறேன்) என்பதே அம் மந்திரம். “கரோமி கரோமி' என்று மூன்றுதரம் சொன்னன். காலிலே ஒரு பாம்பு வந்து கடித்தது. 'தாயே, உன் மந்திரத்தின் பயன் இதுதான?’ என்று அலறிஞன். 'அஞ்சாதே, மந்திரத்தைச் சொல்லு, மந்திரத்தைச் சொல்லு, மந்திரத்தைச் சொல்லு' என்று அசரீரி வாக்குப் பிறந்தது. இந்தப் புதிய வாக்கைக் கேட்கும்போது அவனுடைய தாயின் குரலைப் போலேயிருந்தது. கரோமி, கரோமி, கரோமி, செய்கிறேன், செய் கிறேன், செய்கிறேன் என்று மறுபடி ஜபிக்கலானன். 'குரு, குரு, குரு (செய், செய், செய்) என்றது அசரீரி. உடனே மூச்சை உள்ளே இழுத்து அமானுஷிகமான