பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. 4. 5. 7。 8. 48 பட்டுத் துகிலென லாமோ?-அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று மட்டு மிகுந்தடித் தாலும்-ஆதை மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் இந்திரன் வச்சிரம் ஒர்பால்-அதில் (தாயின்) எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் (தாய்) மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானே? கம்பத்தின் கீழ்நிற்றல் காணிர்-எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற் குரியர்அவ்வீரர் ;-தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர் அணியணி யாயவர் நிற்கும்-இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்ருே? பணிகள் பொருந்திய மார்பும்-விறல் பைந்திரு வோங்கும் வடிவமும் காணிர்! செந்தமிழ் நாட்டுப் பொருநர்-கொடுந் தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்த தெலுங்கர்-தாயின் சேவடிக் கேபணி செய்திடு துளுவர். கன்னடர் ஒட்டிய ரோடு-போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும் (தாயின்) (தாயின்) (தாயின்) பொற்புடை யார்இந்து ஸ்தானத்து மல்லர். பூதலம் முற்றிடும் வரையும்-அறப் போர்விறல் யாவும் மறப்புறும் வரையும், மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்,