The vainly rich, the miserable proud, The mob of peasants, tnobles, priests and kings And with blind feelings reverence the power That grinds them to the dust of misery; But in the temple of their hireling hearts Gold is a living God, and rules in scorin All earthly things but virtue), இவ்வாறு தங்கம் உயிருள்ள கடவுளாக மாறி உலகையே அடிமை கொள்வதால், மன்னர்களும் பொருளாசையின் காரணமாகப் போரையும் நாசத்தையும் கொண்டு வரு கிறார்கள் என்று கருதுகிறான் ஷெல்லி: ('கொடுங்கோலர்கள் மனித வாழ்க்கையையே விற்பனை செய்வதன் மூலம் தமது புலன் வேட்கைக்கும், புகழுக்கும், பெருநாசமும் தீராத பசியும் கொண்ட கர்வத்துக்கும் இரைதேடி, செல்வங்களைக் குவிக்கிறார்கள்; இதனால் வெற்றியானது அப்பாவித்தனமான உலகுக்கு அழிலையும், அவமானத்தையும், யுத்தத்தின் கொடு மைகளையும் வழங்கியுள்ளது (படலம் 5, வரிகள் 64-68): (Since tyrants by the sale of human life Heap; luxuries to their sensualism and farme To their wide-wasting and insatiate pride, Success has sanctioned to a credulous world The ruin the disgrace, the woe of war.) . இவ்வாறு மனிதர்கள் செல்வத்துக்கு அடிமைப்பட்டு அதனை வணங்குவதாலும், பொருளாசையாலும் போர் மூள்வதாகக் கூறும் ஷெல்லி, போரைப் பற்றிப் பின்வருமாறு முடிவு கட்டுகிறான் : போர்..., அது ராஜதந்திரியின் விளை யாட்டு; மதகுருவின் ஆனந்தம்; வழக்கறிஞனின் தமாஷ்; கூலிக்குக் கொலை புரியவனின் தொழில்; வஞ்சகம், ரத்தக் களரி முதலிய குற்றங்களால் வாங்கப்பட்ட கேவலமான சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கும் ராஜகுலக் கொலைகாரர் களுக்கோ, அது அவர்கள் உண்ணும். ரொட்டி; அவர்கள் சாயும் செங்கோல்!** ('ராணி மாப்' படலம் 4, வரிகள் 168-172};
பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/83
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை