பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டு நாகரிகம் 105 ஷார்த்தங்களிலும் எவ்விதமான ஸம்பந்தமுமில்லாமலே செய்கை யற்று மடிந்து கிடப்பானென்றெண்ணுதல் பெருங் தவறு. உயிர் உள்ளவரை ஒருவன் தொழில் செய்யாதிருக்கக் கடவுளுடைய இயற்கை இடங் கொடாது. ' யாவனயினும் (மனத்தாலேனும், வாக்காலேனும், உடம்பாலேனும்) யாதேனுமொருவிதமான செய்கை செய்து கொண்டிராமல் சும்மாயிருத்தல் ஒரு கூடிணங் கூட ஸாத்தியப்படாது. இயற்கையிலேயே பிறக்கும் குணங் களால் ஒவ்வொருவனும் தன் வசமின்றியே எப்போதும் தொழில் செய்து கொண்டிருக்கும்படி வற்புறுத்தப்படுகிருன் ' என்று கண்ணபிரான் பகவத்கீதையில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிரு.ர். இன்னும் ஒளவைப் பிராட்டியின் நூல்களிலுள்ள வசனங் களே உதாரணம் காட்டி அவருடைய மகிமைகளேயெல்லாம் விளக்கிக் கூற வேண்டுமாயின் அதற்கு எத்தனையோ சுவடிகள் எழுதியாக வேண்டும். நமது வியாசமோ ஏற்கனவே மிகவும் கெடிதாய் விட்டது. ஆதலால் இந்தக் கவியரசியைக் குறித்துத் தற்காலத்தினர் தெரிந்து கொள்ளவேண்டிய அம்சங்களில் மிகவும் முக்கியமான, எனக்கு தோன்றுவனவற்றை மற்ருெரு வியாஸத் தில் சுருக்கமாகச் சொல்ல உத்தேசம் கொண்டிருக்கிறேன். தமிழ் நாட்டு மாதராகிய, என் அன்புக்கும் வணக்கத்துக்கு முரிய சகோதரிகளே, இத்தனே பெருமை வாய்ந்த தமிழ் நாகரி கத்தின் எதிர்கால வாழ்வு உங்களுடைய பயிற்சிகளையும் முயற்சி களேயும் பொறுத்திருக்கிறது. பூமண்டலத்தில் கிகரில்லாத அருஞ் செல்வமுடைய சேம நிதியொன்றுக்குக் கடவுள் உங்களைக் காவலாக கியமித்திருக்கின்ருன். மனித உலகமோ, இந்த நேரத் தில், பிரமாண்டமான சண்ட மாருதங்களைப் போன்ற மாறுதல் களாலும், கிளர்ச்சிகளாலும், புரட்சிகளாலும், கொந்தளிப்புற்ற கடலிடைப்பட்டதொரு சிறு தோணிபோல் அலைப்புண்டும், புறளுண்டும், மோதுண்டும், எற்றுண்டும், சுழற்றுண்டும் தத்தளிக்கிறது. இந்த மஹா ப்ரளய காலத்தில் தமிழ் நாகரிகம் சிதறிப் போகாதிருக்கும்படி கடவுள் அருள் புரிவாராகுக. அஃது அங்ங்னம் சிதருமலிருக்குமாறு தகுந்த கல்விப் பெருமையாலும், ஒழுக்க மேன்மையாலும் விடுதலையின் சக்திகளாலும் அதைக் காப்பாற்றக்கூடிய திறமையை உங்களுக்கு பர ப்ரம்மம் அருள் செய்க.