பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாதிக் குழப்பம் 111 அதை அவனுக்கு கினைப்பு மூட்டி " மிருகங்களை அன்பினல் பழக்கவேண்டும். கருணையில்லாமல் அடித்துப் பழக்குவது சரி யில்லை' என்றேன். கான் இந்த வார்த்தை சொன்னதுதான் தாமஸம், அவன் மிகவும் நீளமாகத் தன் சாஸ்திரக் கட்டுகளை யெல்லாம் அவிழ்த்து விரிக்கத் தொடங்கிவிட்டான். அந்த மாவுத்தன் சொல்லுகிருன் :- " இந்த யானே கீழ்ஜாதி யானை ; யானைகளில் ப்ரம்ம, கூடித்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு முக்கிய ஜாதிகளுண்டு. ஒவ்வொரு ஜாதியிலும் கிளை வகுப்புக் களிருக்கின்றன. அவற்றுள் இது சூத்திர ஜாதியைச் சேர்ந்த யானே. மனிதர்களில் சூத்திரர்களுக்குள்ளே ஈழுவர் என்ற ஜாதியர் இருக்கிருர்களே. அதே மாதிரி இந்த யானே வீரன் வகுப்பைச் சேர்ந்தது............' இங்ங்னம் அந்த மாவுத்தன் மீண்ட கதை சொன்னன். கான் இந்த விஷயத்தை இங்கு எடுத்துச் சொல்லியதின் நோக்கம் யாதெனில், நம்மவர்கள் மனதில் இந்த ஜாதிக்கொள்கை எத்தனே ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை உணர்த்தும் பொருட்டேயாம். யானையை எடுத்தால், அதில் ப்ரம்ம, கடித்திரிய, வைசிய, சூத்திரர் குதிரையிலும் அப்படியே! வானத்திலுள்ள கிரஹங்களிலும் அதே மாதிரி ப்ரம்ம, கடித்திரிய முதலிய ஜாதி பேதங்கள். இரத்தினங்களிலும் அப்படியே ! இங்ங்னம் ஜாதிக்கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸ்மத்வம், ஸ்ஹோதரத்வம் என்னுங் கொள்கைகளே கிலே கிறுத்துவதென்ருல் அது ஸாதாரண வேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா ? பறை பதினெட்டாம் ! துளை நூற்றெட்டாம் ! அதாவது பறையர்களுக்குள்ளே 18 பகுதிகளும், நுளேயர்களில் 108 பகுதிகளும் இருக்கின்றனவாம். மேலும், பறையன், பள்ளன் சக்கிலியன் எல்லோரும் வெவ்வேறு ஜாதிகள் ; ஒன்றுக்கொன்று பக்தி போஜனம் கிடையாது. பெண் கொடுக்கல், வாங்கல் கிடையாது. கேலி ; கேலி, பெருங்கேலி. இங்ங்ணம் ஏற்கனவே மலிந்து கிடக்கும் பிரிவுகள் போதாவென்று புதிய புதிய பிரிவுகள்காள்தோறும் ஏற்பட்டு வருகின்றன. சீர்திருத்தம் வேண்டுமென்ற நல்ல நோக்க முடையவர்களிலே சிலர்