பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாதிக் குழப்பம் 113 யரை நல்ல ஸம்ஸ்காரங்களால் பிராமணர்களாக்கிவிட முடியு மென்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங் களிருக்கின்றன. அந்தப்படி இந்தியா முழுவதையும் பிராமண தேசமாகச் செய்து விட்டால் கல்லதென்பது என்னுடைய அபிப் பிராயம். எந்த ஜாதியாகயிருந்தாலும் சரி. அவன் மாம்ஸ் பr. ணத்தை கிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணுால் போட்டு காயத்திரி மத்திரம் கற்பித்துக் கொடுத்துவிட வேண்டும். பிறகு, அவன் பிராமணனாகவே கருதப்பட வேண்டும். இதுதான் விவே காகந்தர் சொல்லிய உபாயம். கூடியவரை நல்ல உபாயமும் கூட. ஆல்ை, மேல் வகுப்பினர் தம்முடைய உயர்வை மறந்து கீழ் வகுப் பினருடன் கலத்தல் இதனிலும் சிறந்த உபாயமாகும். 8.سtur