பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூட பக்தி 14t கடப்பது முற்றிலுக் தவறு. மேலும் அது உண்மையான காரணமன்று. போலிக் காரணம். ந ம் ம வர் இத்தகைய ஸ்ாதாரண மூட பக்திகளே விட்டு விலகத் துணியாமலிருப்பதின் உண்மையான காரணம் வைதிகரும் பாமரரும் நம்மை ஒருவேளை பந்திபோஜனத்துக்கு அழைக்காமல் விலக்கி விடுவார்கள் என்பதுதான். இங்கிலீஷ் படித்த மேற்குலத்து ஹிந்துக்கள் கணக்கில்லாத மூட பக்திகளைக் கை விலங்குகளாகவும், கால் விலங்குகளாகவும், கழுத்து விலங்குகளாகவும் பூட்டிக் கொண்டு தத்தளிப்பதின் தலைமைக் காரணம் டிெ பக்தி போஜனத்தைப் பற்றிய பயந்தான். அதைத் தவிர வேருென்றுமில்லை. அந்த மெய்யான காரணத்தை மறைத்துவிட்டு ஸ்திரீகளின் மீது வீண் பழி சுமத்தும் இந்த வீரர்கள் மற்றும் எத்தனையோ வியவகாரங் களில் தம்மினத்து மாதரை விலையடிமைகள் போலவும் விலங்குகள் போலவும் கடத்தும் விஷயம் காம் அறியாததன்று. எண்ணில்லாத பொருள் கஷ்டமும் கால கஷ்டமும் அந்தக் காரணத்தின் இகழ்ச்சியும் உலகத்து அறிஞரின் நகையாடலும் ஸ்த்ய தெய்வத்தின் பகைமையும் சிறிதென்று கொண்டீர் 1 பந்தி போஜன ஸ்வதந்திரம் பெரிதென்று கொண்டீர்! தைரியமாக நீங்கள் உண்மை யென்று உணர்ந்தபடி கடவுங்கள். பக்திபோஜனம் சிறிது காலத்துக்குத்தான் உங்களுக்குக் கிடைக் காதிருக்கும். பிறகு உங்கள் கூட்டத் தொகை அதிகமாகும் ; ஸ்த்ய பலம் முதலிய பல பல காரணங்களால் மேற்படி பக்தி போஜனமும் உங்களுக்கு ஸித்தியாய்விடும். தைர்யமாக வேலை செய்யுங்கள்.