பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனர் ஜன்மம் 153 வேண்டும். இன்பமில்லாமல் கணக்கு மாத்திரமிருந்தால், அது பாட்டாகாது. மறு பிறப்பு இடைக் காலத்தே நமக்கு நேர்ந்த கேட்டிற்கு ஸங்கீதத்தை யும் கவிதையையும் திருஷ்டாந்தங் காட்டினேம். ஆனால், இந்தக் கேடு அவை இரண்டையும் மாத்திரமே தொட்டு கிற்கவில்லை. நமது சித்திரத் தொழில், நமது சிற்பம், நமது ஜனக்கட்சி, ஜன. நீதி, நமது சாஸ்திரம், தலை, கால்-எல்லாவற்றிலும் இந்தக் கேடு பாய்ந்துவிட்டது. நோய் முற்றிப்போயிருந்தது. பராசக்தி கல்ல வேளையில் நமக்குள் உயர்ந்த வைத்தியர் பலரை அனுப்பினள். அவளுக்கு நம்மீது கிருபை வந்து விட்டது. எனவே, பிழைத் தோம். ஆலுைம், இம்முறை பிழைத்தது புனர்ஜன்மம். இந்தப் புனர் ஜன்மத்தின் குறிகளே எல்லாவற்றிலும் காண்கிருேம். பாரத ஜாதி புதிதாய் விட்டது. தற்காலத்திலே பூமண்டலத்து மஹா கவிகளில் நமது ரவீந்திரநாதர் ஒருவர் என்று உலகம் ஒப்புக் கொள்ளுகிறது. இதுவரை ஐரோப்பிய பண்டிதர்கள் இயற்கை நூல் (ப்ரகிருதி சாஸ்திரம்) தமது விசேஷ உடமை என்று கருதி வந்தார்கள். இப்போது நமது ஜகதீச சந்திர வஸ்அந்த வழியில் நிகரற்ற திறமை பெற்றவர் என்பதை மேல் காட்டு வித்வான்களில் ஒப்புக் கொள்ளாதவர் யாருமில்லை. தமிழ் காட்டிலே புதிய கவிதையும் சாஸ்திர ஒளியும் விரைவிலே தோன்றும். உலகம் பார்த்து வியப்படையும். செத்துப் பிழைத்தோம். ஆனல் உறுதியாக நல்ல வயிரம் போலே பிழைத்து விட்டோம். புதிய ஜன்மம் நமக்கு மிகவும் அழகான ஜன்மமாகும்படி தேவர்கள் அருள் புரிந்திருக்கிருர்கள். அதன் பொருட்டு அவர்களே இடைவிடாமல் வாழ்த்துகிருேம். 2 பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் கர்மத்தினுடைய பலகை அடுத்த ஜன்மத்தில் உயர்ந்த பிறப்பேனும் தாழ்ந்த