பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம் 165 என்ற மூதுரைக்கு இணங்கியே நாம் நடக்க வேண்டும். இவ்வாறு நடக்க முடியாதவன் தான் பேடியென்று ஒப்புக் கொண்டு பின்னடைய வேண்டும். நானும் ஸ்வராஜ்யக் கொள்கை யுள்ளவன் என்று முன் வந்து கிற்க வேண்டாம். சுதந்திரக் கொள்கையை உடையவன் தன் ஆத்மாவைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் இழந்துவிடச் சித்தமாயிருக்க வேண்டும். ஹே, பரதா! சோம்பலுள்ளவனுக்கு எவ்விதக் கொள்கையும் ஏற்காது. மழையென்றும், வெய்யிலென்றும், காற்றென்றும், பசியென்றும், தாகமென்றும், கித்திரையென்றும் பாராட்டாதே. இந்தச் சரீரமே அகித்தியம் என்ருல், அதையொட்டிய அவஸ்தை கள் கித்தியமாகுமா? இந்திரிய அவஸ்தைகளுக்கு அஞ்சியாவது இந்திரிய சுகங்களைக் கோரியாவது தேசிய தர்மத்தைக் கைவிடாதே. பிரம்மமே கித்தியம். சத்தியமே ஜெயம். யுேம் அடிமைத்தனத்திலிருந்து நீங்க வேண்டும். உன்னுடைய ஐய பேரிகையை அடித்துக் கொண்டு உலகத்தில் எந்தெந்த பாகத்தில் யார் யார் அடிமைப்பட்டிருக்கிருர்களோ அவரவரை விடுவிக்க வேண்டும். உன் செயலால் பாரதமாதா முன்போல் உலகத்திற்குத் திலகமாய் ஜ்வலிக்க வேண்டும். இந்தக் கொள்கைகளைக் கைவிடாதே, கைவிடாதே, கைவிடாதே, முக்காலும் சொன்ைேம்.