பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கு 3 இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்த்து ஸர்க்காருக்கு கன்ருக உழைத்ததினுல் ராவ்பகதூர்’ என்ற பட்டம் பெற்றவர். சுதேசி யம் தொடங்கும் முன்பாகவே இவர் வேலையிலிருந்து விலகிவிட் டார். இதை எதன் பொருட்டாகச் சொல்லுகிறேன் என்ருல், அவருக்குக் கிடைத்த பட்டம் வெறுமே சில சுதேசீயத் தலைவர்கள் மீது ரிப்போர்ட் எழுதிக் கொடுத்துச் சுலபமாக சம்பாதித்த பட்டமன்று. யதார்த்தத்திலேயே திறமையுடன் உழைத்ததினால் கிடைத்த பட்டம். குழந்தை முதலாகவே மீனம்பாளே எனக்கு விவாகம் செய்து கொடுக்கவேண்டும் என்பது அவருடைய கருத்து. அந்தக் கருத்து கிறைவேறுவதற்கு நேர்ந்த விக்கினங் கள் பல. அவ்விக்கினங்களில் பெரும்பான்மையானவை என்ன லேயே உண்டாயின. நான் சுமார் பதினறு பிராயம் வரை சென்னை கிறிஸ்தியன் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். வேத கால முதலாக இன்றுவரை பாரத தேசத்திலுள்ள ரிஷிகளெல்லோரும் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜுனனும், காளிதாஸனும், சங்கராசாரி யாரும், சிவாஜியும், ராமதாஸ்ரும், கபீர்தாலரும் அதற்கு முன்னும் பின்னும் நேற்றுவரையிருந்த பாரத தேசத்தார் அனே வரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திகளெல்லாம் இழிந்த அகாக ரிகமான மூடபக்திகள் ' என்பது முதலான ஆங்லேய சத்தியங்கள் எல்லாம் என் உள்ளத்திலே குடிபுகுந்து விட்டன. ஆனல், கிறிஸ்துவப் பாதிரி ஓர் வினேதமான ஜந்து, ஹிந்து மார்கத்திலும், ஹிந்து நாகரீகத்திலும் பக்தி செலுத்துவது பேதைமை என்று ருஜூப்படுத்திக்கொண்டு வரும்போதே, அவர் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்துவிடுகிருர். மத விஷயங்களைப் பற்றி விஸ்தாரமான விவகாரங்கள் எழுதி, படிப்பவர்களுக்கு நான் தலைநோவு உண்டாக்கப் போவதில்லை. சுருக்கம் நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி, ஞான ஸ்னைம் பெறவில்லை ; பிரம்ம ஸ்மாஜத்திலே சேர்ந்து கொண்டேன். சிறிது காலத்திற்கு அப்பால், பட்டணத்தில் படிப்பை கிறுத்து விட்டு, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கல்கத்தாவுக்குப் புறப் பட்டுப்போய், அங்கே பிரம்ம ஸ்மாஜத்தாரின் மார்க்க போதனை