பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19 யுமா? உனக்கு டிஸ்மிஸ் ஆர்டர் எழுதிக் கொண்டு வரத் தான் போயிருக்கிறான். இனிமேலாவது எழுந்து போய் விடு. உன்னை மன்னித்தாலும் மன்னிப்பான். இல்லாவிடின் உன்னோடு எங்களுக்கும் ஏதாவது தொல்லை நேரிடலாம்’ என்று சொல்லிப் பார்த்தார்களாம். அப்போதும் கவிஞர் எழுந்து செல்லாமல் ஆணி அடித்துக் கொண்டும் வேர் பாய்ந்தும் அதே இடத்தில் அமர்ந்திருந்தாராம். சிறிது நேரத்தில் துரை தம் மனைவியை அழைத்துக் கொண்டு வந்து கவிஞரைச் சுட்டிக்காட்டிப் பின்வருமாறு கூறினாராம்: "இதோ பார் இவரை! கதர் ஆடையும் கதர்க் குல்லாவும் அணியக் கூடாது; அணிந்தால் வேலை போய் விடும் என்று நாம் விதி செய்துள்ளோம். அப்படியிருந்தும், இவர் எதற்கும் அஞ்சாமல் கதர் உடையுடன் என் எதிரி லேயே வந்திருக்கிறார். இவருடைய உறுதி யான துணிவையும் நாட்டுப் பற்றையும் பார்! இப்படியொரு நாட்டுப் பற்றுடையவர் இருப்பார் என்று நான் எதிர் பார்க்கவேயில்லை என்று தம் மனைவியிடம் கூறிக் கவி ளுரை மெச்சினாராம். அதன் பிறகுதான் ஆசிரியர்கள் அச்சம் நீங்கி மூச்சு விட்டார்களாம். இங்கே நாம், கவிஞரின் உறுதியான நாட்டுப் பற்றைப் பெரிதும் வியப்பதா? அல்லது, கல்வித்துறைத் தலைவரின் பெருந்தன்மையைப் பற்றிப் பெரிதும் வியப்பதா? ஒன்றும் புரியவில்லையே. சரி-இருவரையுமே வியப்போம். இச் செய்தியைக் கவிஞர் என்னிடம் நேரில் கூறியபோது நான் அவரை மிகவும் பாராட்டினேன். ஒன்றினம் முடித்தல்-தன் இனம் முடித்தல் ஒரு செய்தியைச் சொன்னால், அது போன்ற மற்