பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

4 சென்ற இடமெல்லாம் சிறப்பு சேலம் மாவட்டத்தில் சிற்சில இடங்களில் கவிஞருக் குப் பெரு மதிப்பு உண்டாம். குழந்தைகளைக் கொண்டு வந்து கவிஞரின் காலில்இட்டு வாழ்த்தச் சொல்வார்களாம். சேலம் மாவட்டத்திலுள்ள இராசிபுரம் என்னும் நக ருக்கு ஒரு முறை கவிஞர் சென்றாராம். அங்கு உள்ள கன்னடிய ராவ் ஒருவரின் விடுதியில் (Boarding And Lodging) மூன்று நாள் தம் உதவியாளர் ஒருவருடன் தங்கி யிருந்தாராம். பிறகு அதைவிட்டுப் புறப்படும்போது, விடு திக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கணக்கு பண்ணி இன்னும் இவ்வளவு தரவேண்டும் என்று விடுதி உரிமை யாளர் கூறினாராம். கவிஞர் தம் பணப்பையைப் பார்த்த போது தொகை ஒரளவு குறைவாக இருந்ததாம். உடனே கவிஞர், தம் உதவியாளரை நேர்க்கி இன்னாரிடம் சென்று நான் வாங்கிவரச் சொன்னதாகச் சொல்லி இவ்வளவு