பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாட்டுக் கலைபயின்றான் - இசைப்
பாடல் கேட்டுவந்தான்
ஆட்டக் கச்சேரிகளை - அவன்
அரங்கில் கண்டுவந்தான்


நூற்கள் பலசெய்தான் - கதை
நூறு சொல்லிவந்தான்
வேற்கை மன்னருக்குப் - பல
வேடிக்கை கூறிவந்தான்


12