பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




சூரத் எனும் ஊரில் வீரர் பலர் கூடிச்
சூழ்ந்தஓர் காங்கிரசில் - அவன்
வீரத் திலகரை நேரினில் சந்தித்து
வீழ்ந்தவர் தாள்பணிந்தான்

தீப்பொறி கக்கும் கருத்துக்களால் நாட்டுச்
சிங்க இளைஞர்களைத் - தட்டிக்
கூப்பிட் டெழுப்பினான்; வீரர்கள் யாவரும்
கொந்தளிப் போடெழுந்தார்

17