பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நண்பர்களை ஒருநாள் - வீட்டுக்கு
நாவலன் கூப்பிட்டான்
எண்ணம் அறிவதற்கே - நண்பர்கள்
இல்லம் வந்தடைந்தார்

பறையர் குலத்தவனை-மேலாம்
பார்ப்பனன் ஆக்குதற்கு
மறைகள் ஓதிநின்றான் - பூணூல்
மாட்டிச் சடங்குசெய்தான்

29