பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செந்தமிழுக்கொரு
சிங்கக் கவியென
வந்தான்! வந்தான்! - பாடல்
சந்தத் தமிழினில்
சிந்தை குளிரவே
தந்தான்! தந்தான்!
பாட்டுப்பெருங்கவி
பாரதி யின்புகழ்
கண்டோம்! கண்டோம்! - அவன்
பாத மலர்களை
நாம் தலைமீது
கொண்டோம்! கொண்டோம்!


44