பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டுதளத்தில் பாரதி அ.சீனிவாசன் 60 கண்ணன்- என் அரசன் என்னும் கவிதையில் பகைமை முற்றி முதிர்ந்திடும் வரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். சிரித்துக்கொண்டே பொருமையுடன் நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் பொறுத்துக் கொண்டிருப்பான் கண்ணன் வந்து பகைமை ஒழிந்து காண்பது அறிதாகும். நாமும் அதை நினைத்து எண்ணமிட்டு, எண்ணமிட்டு யுகங்களாகிவிடும். படைகளைச் சேர்ப்பது, பரிசனம் சேர்ப்பது, பணமுண்டாக்குவது எதுவும் செய்திடான். இடையன், வீரமில்லாதவன், பயந்தவன் என்றெல்லாம் எவரும் ஏசினாலும் நாண மாட்டான். தன்னைக் கொல்லுவதற்கு பூதத்தை அனுப்பும் மாமன், கோலுயர்த்தி உலகை ஆண்டு கொண்டுகளித்திருப்பதைக் கண்டும் காணாமல் பாட்டிலும் மாதர் கூட்டிலும் மோகமுற்று பொழுதுபோக்குவான். அவன் காலைப்பற்றிக் கொண்டுநாம் கதி எமக்கொன்று காட்டுவாய் எனக்கேட்டால் நாலில் ஒன்று பலித்திடும் என்று கூறிச்செல்வான். அதன் பொருள் நமக்கு விளங்காது. அவன்வலுவை நம்பி நாம் இருக்க நாணமில்லாமல் அவன் எங்கோ போய் பதுங்கிக் கொள்வான். தீமையை விலக்கவும் செல்வான். சிறுமை கொண்டு ஒளிந்து ஒடவும் செய்வான். தந்திரங்கள் பயிலவும் செய்வான். சவுரியங்கள் பழகவும் செய்வான். மந்திரங்கள் பலவின் திறனும் காட்டுவான். வலிமையின்றி சிறுமையிலும் வாழ்வான். காலம் வந்து கை கூடும் போது கணத்திலே புதிய தோற்றம் எடுத்து ஆலகால விஷம் போல் சீறி எழுந்து அகிலம் முழுவதையும் அசைத்திடுவான் என்றெல்லாம் கண்ணன் என் அரசன் என்னும் தலைப்பில் விவரித்துக் கூறி காலம் வந்துற்ற போது துள்ளி எழுந்து, "வேரும் வேரடி மண்ணும் இல்லாமலே வெந்து போக பகைமை பொசுக்குவான் பாரும் வானும் ஆயிரம் ஆண்டுகள் பட்டதுன்பம் கணத்திடை மாற்றுவான் "சக்கரத்தை எடுப்பது ஒரு கணம், தருமம் பாரில் தளைத்தல் மறுகணம் - "இக்கணத்தில் இடைக்கண மொன்றுண்டோ இதனுள்ளே பகை மாய்த்திடவல்லன் காண்!